Pages

Thursday 9 May 2013

காப்பாற்ற வருவாய்

காதலா !..உன்னை நான் எப்படி
காணாமல் இருப்பேன்?..
இருதயம் இல்லாத கூட்டத்தின்
இரும்பு பிடியில் நான் ...
பாசம் இருப்பதுபோல்
பாசாங்கு செய்கிறார்கள் ...
பார்க்க கூடாதாம் உன்னை
பார்வை பிறகு எனக்கு எதற்கு ?..
விரல் பதிந்த கைப்பேசி அழுகிறது -என்
விரல்கள் வலுவிழந்ததை கண்டு ...
உறக்கமின்றி நான் தவிப்பது ..
உனக்குமட்டும் தெரியாதா என்ன ?...
காப்பாற்ற வருவாய் நீ ..
காதலை வாழ வைப்பாய்நீ ..
காலமெல்லாம் நம்பிக்கையில் ..
காத்திருக்கும் காதலி .....

பேய் என ஆன தாய்

தாயே!நீ ஏன் இப்படி
பேய் என ஆனாய் ?..
தரக்குறைவான வார்த்தைகள் பேசி ..
தரம் குறைந்து நிற்கிறாய் ...
உன்மீது நான் வைத்த நம்பிக்கை
உடைந்து தான் போய்விட்டது ....
காதல் செய்வது என்ன பெரும் பாவமோ ?..
காட்டு மிரண்டியாய் நடந்து கொள்கிறாய் ..
பாசத்தால் நிறைந்த என் மனம் --இன்று
பாரமாகி போனதே தாங்கமுடியவில்லை ..
எதிர் பார்க்கவில்லை தாயே !---நீ
எதிரி போல் என்னை பார்ப்பாய் என்று ..
இரட்டை வேடம் போடும் உன்னை
இப்பவும் மன்னிக்கிறேன் நீ தாய் என்பதால் ..
உண்மையை பேசு --தயவு செய்து
உன் உள்ளத்திலிருந்து பேசு .....



Wednesday 1 May 2013

மகளே !என் அருமை மகளே!


மகளே !என் அருமை மகளே!
மலடி என ஒருவரும் அழைக்காவண்ணம் 
மகளாய் பிறந்தவளே!...
மகிழ்கின்றேன் உன்னில் ...
ஒரு மணி நேர வேதனையை 
ஒரு வினாடியில் மறந்தேன் ...
என்னுள் குடியிருந்த உயிரே ..
என்னை கட்டிக்கொண்டு 
என் கன்னத்தில் நீ இட்ட முத்தம் 
என்றுமே இனிக்குமே திகட்டாது ...
உன் மழலையில் மகிழ்ந்தேன் 
உன் அறிவில் வியந்தேன் 
உன் அன்பில் நனைந்தேன் 
உன் சாதனையில் பெருமிதமடைந்தேன் 
ஒரு சில வரிகளில் முடிந்திடுமோ?
ஒரு தாயின் பாசம் ..
ஒரு யுகம் கடந்து போனாலும் 
ஒரு அற்புதமாய் என்றும் நிற்கும் .

நமக்குள் பிரிவு

நமக்குள் பிரிவினை ஏன் தெரியவில்லை 

பாசம் அன்பு மாறியதேன் புரியவில்லை 
உன் அன்பு கிடைக்க நான் கொடுத்துவைக்கவில்லை 
விலகி நீ  போனாலும் உன்னை என்றும் 
விரும்பியே இருப்பேன் அன்பே ..

வலி தீர வழி சொல்


உதட்டளவில்தான் உறவு வைத்தாய் 
உள்ளத்திலிருந்து ஏனோ விலக்கிவைத்தாய் 
உணர்ந்து கொண்ட போதோ !..
உயி ர் அறுந்து வீழ்ந்தேன் ..
பார்க்காதபோது பரிவுடன் இருந்தாய் ..
பார்த்தபின் ஏனோ பரிதவிக்கவிட்டாய் 
பார்த்து எதிர்பார்த்து பாதியானது தேகம் 
பாராமுகமாய் நீ இருப்பதால் 
வலிக்கிறதே என் நெஞ்சம் ..அந்த 
வலிதீர வழி ஒன்றை சொல் ...

Tuesday 2 April 2013

ஹைக்கூ

இரைச்சல்

ரயில் ஓடும் தண்டவாளமாய் -உன்
நினைவுகள் ஓடும் மனதில் ..
ஒரே இரைச்சல் ...

காதல் பூ

உன் அன்பெனும் மழைச்சாரலால் ..
பூத்ததோ என் மனதில்
காதல் பூ ...

காதல் வாசம்

சந்தனகட்டையே உரசினாய் நீயும்
இந்த கல்மீது ...மணக்கின்றேன் நானும்
சந்தனமாய் .....


காதல்


காணவில்லை

நெருங்கினாய் பார்வையால்
நிரப்பினாய் வார்த்தையால்
கொன்றாய் அன்பால்
புதைத்தாய் உன் உள்ளத்தில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காணவில்லையே என்னை ....


காதல் நாடகம்

நில்லாமல் நின்றாய்
பார்க்காமல் பார்த்தாய்
சொல்லாமல் சொன்னாய்
கொல்லாமல் கொன்றாய்
செல்லாமல் செல்கிறாய் -இதுதான்
காதல் நாடகமா?..